கத்தோலிக்கத் திருச்சபை ஏழைகளின் வாழ்வில் பல வழிகளிலும் பிரசன்னமாகி இருக்கிறது -
பேராயர் Antonio Maria Velgio
அக்.20,2010. வீடுகளின்றி வாழ்வோருக்கான மேய்ப்புப் பணி இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்
என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார். ஆசிய, Oceania நாடுகளில் சாலைகளில் வாழ்வோருக்கான
மேய்ப்புப்பணி குறித்த ஒரு கூட்டம் இச்செவ்வாயன்று தாய்லாந்தின் பாங்காக்கில் ஆரம்பமானது.
புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணிகளுக்கான திருப்பீடத்தின் ஆணையத் தலைவரான பேராயர் Antonio
Maria Velgio இக்கூட்டத்திற்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். ஆசிய ஆயர்கள்
பேரவையின் ஆதரவுடன் வருகிற சனிக்கிழமை வரை நடைபெறும் இக்கூட்டத்தில் 18 நாடுகளின் பிரதிநிதிகள்
கலந்து கொண்டுள்ளனர்.கத்தோலிக்கத் திருச்சபை ஏழைகளின் வாழ்வில் பல வழிகளிலும் பிரசன்னமாகி
இருப்பதற்கு இது போன்ற கூட்டங்கள் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறியுள்ள பேராயர் Velgio,
இக்கூட்டத்திற்குத் திருத்தந்தையும் தன் ஆசிகளை அனுப்புகிறார் என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.