2012ம் ஆண்டு அயர்லாந்தில் நடைபெற உள்ள அகில உலக திருநற்கருணை மாநாடு குறித்து ஆயர்கள்
கலந்தாலோசனை
அக்.20,2010. ஒவ்வொரு உண்மையான மனித அனுபவத்தையும் உள்ளடக்கியதே திருநற்கருணை என்று அயர்லாந்து
ஆயர்கள் கூறியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற அயர்லாந்து ஆயர் பேரவைக் கூட்டத்தில் 2012ம்
ஆண்டு அந்நாட்டில் நடைபெற உள்ள அகில உலக திருநற்கருணை மாநாடு குறித்துப் பேசிய ஆயர் பேரவை
இவ்வாறு கூறியது. அண்மையில் அயர்லாந்து தலத் திருச்சபை பாலியல் தொடர்பான பிரச்சனைகளைச்
சந்தித்த பின், அந்நாட்டுத் திருச்சபை உண்மையான மன மாற்றத்துடன், ஆன்மீக வழியில் திருநற்கருணை
மாநாட்டிற்குத் தயாரித்து வருவதாக ஆயர்கள் கூறினர்.கருவில் உள்ள குழந்தைகளுக்கென திருவருகைக்
காலத்தின் முதல் ஞாயிறான நவம்பர் 28ம் தேதியையொட்டி திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும்
இரவு கண்விழிப்பு செபத்தைக் குறித்தும் இவ்வாயர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது.