தலத்திருச்சபையின்
கல்வித்திட்டமானது கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் இஸ்லாமிய மாணவர்கள் அமைதியில் ஒன்றிணைந்து
வருவதற்கு உதவியுள்ளதாக அறிவித்தனர் அவர்கள்.
போஸ்னியப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள்
கடந்துள்ள போதிலும் அங்குள்ள கத்தோலிக்கர்களின் வாழ்வில் விடிவு பிறக்கவில்லை மற்றும்
அவர்கள் குடிபெயர்வது தொடர்கிறது எனக்கூறும் பத்திரிகையாளர்கள் இவான் மற்றும் மிரெலா
ஸிசிச், இத்தகைய சூழலிலும் கத்தோலிக்கத் திருச்சபை தன் கல்வித்திட்டங்கள் மூலம் ஒப்புரவுக்கும்
மதங்களிடையேயான உறவுக்கும் உழைத்து வருவதாகத் தெரிவித்தனர்