2010-10-16 16:07:55

டெங்கு காய்ச்சல் : எச்சரிக்கிறது உலக நலவாழ்வு நிறுவனம்


அக்.16,2010: கடந்த பத்து ஆண்டுகளில் உலகம் முழுவதும் டெங்கு காய்ச்சலினால் பலியானோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் வாழும் மக்களில் ஐந்தில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆசிய பசிபிக் நாடுகளில் 250 கோடி மக்கள் அதாவது சுமார் 70 விழுக்காட்டினர் இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நோய் உருவாவதற்கு பருவகால மாறுபாடுகளாக அதிக வெயில் மற்றும் அதிகமாக பெய்யும் மழை முக்கிய காரணமாக அமைகிறது.

கழிவுகளை அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவது, மழை நீரைத் தேங்க விடுவது போன்ற காரணங்களால் டெங்குகாய்ச்சல் நோயை உண்டாக்கும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. நாம் நமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொண்டாலே அனைத்து வகை கொசுக்கள் உற்பத்தியைக் குறைக்க முடியும் என உலக நலவாழ்வு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது







All the contents on this site are copyrighted ©.