பாகிஸ்தானில் இளம் கிறிஸ்தவச் சிறுமிகள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்- Fides
அக்.15,2010. பாகிஸ்தானில் இளம் கிறிஸ்தவச் சிறுமிகள் கடும் வன்முறை மற்றும் பாலியல்
வன்செயல்களில் குறிவைத்து ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று வத்திக்கான் மறைபோதகச் செய்தி
நிறுவனமான Fides அறிவித்தது.
Lubna எனப்படும் 12 வயதுச் சிறுமி Kiran Nayyaz
ஒரு முஸ்லீம் குழுவால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள். Kiran என்ற
13 வயதுச் சிறுமி ஒரு முஸ்லீம் இளைஞனால் கற்பழிக்கப்பட்டுத் தற்பொழுது கர்ப்பமாய் இருக்கிறாள்.
மிக அண்மையில் நடந்த இவ்விரு சிறுமிகள் குறித்த செய்திகளும், ஒருபானைச் சோற்றுக்கு
ஒரு சோறு பதம் என்பது போல் இருக்கின்றன என்று அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பாகிஸ்தானில்
வன்செயல்கள் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியுள்ளன என்றும் கிறிஸ்தவ மற்றும் இந்துச்
சிறுமிகளுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன என்றும் Fides கூறியது.