2010-10-14 16:09:16

ஆஸ்திரேலியப் புனிதரின் பெயரை பயன்படுத்த திருத்தந்தை உதவ வேண்டும் என்ற விண்ணப்பம்


அக்.14,2010. வருகிற ஞாயிறன்று புனிதர் என அறிவிக்கப்பட உள்ள மேரி மக்கில்லாப் பெயரை எந்த ஒரு வர்த்தக நிறுவனமும் உத்தரவின்றி பயன்படுத்தக்கூடாதென ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள அரசாணையை எதிர்த்து, அந்நாட்டின் தனிப்பட்ட, சிறு வர்த்தகர்கள் திருத்தந்தையிடம் மேல் முறையீடு செய்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசு இத்திங்களன்று வெளியிட்ட இந்த அரசாணை, சிறு வர்த்தகர்களின் நெஞ்சில் பாய்ச்சப்பட்ட ஒரு கத்தி என்று சிறு வர்த்தகர்களின் சார்பில் திருத்தந்தையிடம் விண்ணப்பித்திருக்கும் Scott Driscoll கூறினார்.

ஒரு புனிதரின் பெயரையோ, உருவத்தையோ பயன்படுத்த அரசின் உத்தரவைப் பெற வேண்டுமென்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஓர் அரசாணை என்று கூறிய Scott Driscoll, இது போன்ற அரசாணைகளால் கடவுள், இயேசு ஆகியோரையும் இனி பயன்படுத்த அரசின் உத்தரவைப் பெற வேண்டியிருக்கும் என்ற தன் கவலையை வெளியிட்டார்







All the contents on this site are copyrighted ©.