தலத்திருச்சபையின் முயற்சிகளைத் தொடர்ந்து மேலும் மூன்று அரசியல் கைதிகளை விடுவிக்கவுள்ளது
அரசு.
அக்.12, 2010. கியூபாவில் சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க தலத்திருச்சபை
எடுத்து வரும் முய்ற்சிகளைத் தொடர்ந்து மேலும் மூவரை விரைவில் விடுவிக்க அந்நாட்டு அரசு
இசைவு அளித்துள்ளது.
ஏற்கனவே தலத்திருச்சபையின் முயற்சிகளுடன் விடுவிக்கப்பட்டவர்கள்
39 பேர் இஸ்பெயின் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில் இம்மூவரும் இஸ்பெயின் நாட்டிலேயே
அடைக்கலம் தேடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் 52 அரசியல்
கைதிகளை விடுவிக்க இசைவு அளித்த கியூப அரசு, இஸ்பெயினில் சென்று குடியேற மறுக்கும் அரசியல்
கைதிகளை விடுவிக்க மறுத்து வருகிறது.
ஏற்கனவே விடுவிக்க உள்ளதாக கியூப ஆயர்களிடம்
அரசு வாக்களித்த 52 பேர் தவிர, தற்போது மேலும் 3 பேரை அரசு விடுவிக்க உள்ளது நம்பிக்கையின்
அடையாளமாகத் தெரிவதாக ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்