2010-10-12 16:15:46

அக்டோபர் 13 நாளுமொரு நல்லெண்ணம்


வருகிற ஞாயிறன்று புனிதராக உயர்த்தப்பட இருப்பவர் Juana Cipitria Barriola. இயேசுவின் கேன்டிடா மரியா அன்னை (Candida Maria de Jesus) என்று ஒரு சில நாடுகளில் இவர் அழைக்கப்படுகிறார். 1845ம் ஆண்டு ஸ்பெயினில் ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர் Juana. வறுமையில் வாடிய அவரது குடும்பத்தைக் காப்பாற்ற இவர் சிறுவயதிலேயே பிற இல்லங்களில் பணி செய்தார்.
"நான் கடவுளுக்கு மட்டுமே உரியவள்." என்று அடிக்கடி கூறி வந்த Juana, இளவயதில் இறை அழைப்பை ஏற்றார். 1871ல் 'இயேசுவின் புதல்வியர்' என்று அழைக்கப்படும் துறவு சபையை ஆரம்பித்தார்.
புனித இலயோலா இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட இத்துறவு சபை 1902ம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் லியோவின் அங்கீகாரம் பெற்றது.
'ஏழைகளுக்கு எங்கு இடமில்லையோ, அங்கு எனக்கும் இடமில்லை' என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் பணி புரிந்த Juana, 1912ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அவரது 67வது வயதில் இறையடி சேர்ந்தார்.இவரை 1996ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தினார். வருகிற ஞாயிறு (அக்டோபர் 17) திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவரைப் புனிதரென அறிவிப்பார்.







All the contents on this site are copyrighted ©.