1492 - கொலம்பஸ் கரிபியனில் பஹாமாசை அடைந்தார். அவர் கிழக்காசியாவைத் தான் அடைந்ததாக
எண்ணினார்.
1582 - கிரகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி,
போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள்
இடம்பெறவில்லை.
1798 - இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
1941 - உக்ரேனின் தினிபுரோபெத்ரோவ்ஸ்க் நகரில் இந்நாளிலும் இதற்கு அடுத்த நாளிலும்
நாத்சி ஜெர்மானியினர் 11,000 யூதர்களைக் கொன்றனர்.
1964 - சோவியத் ஒன்றியம் வஸ்கோத்1
விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற
முதலாவது விண் ஓடமாகும்.
1968 - ஈக்குவட்டோரியல் கினி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை
பெற்றது.