நொபெல் இலக்கிய விருது பெற்றுள்ள Vargas Llosa வுக்கு லீமா கர்தினால் பாராட்டு
அக்.09,2010. நொபெல் இலக்கிய விருது பெற்றுள்ள பெரு நாட்டு எழுத்தாளர் Mario Vargas Llosa
வின் மதிப்பீடுகளைப் பாராட்டியுள்ளார் அந்நாட்டு லீமா கர்தினால் Juan Luis Cipriani
Vargas
Llosa , சுதந்திரம், ஜனநாயகம், ஆகியவற்றைத் திறந்த மனத்துடனும் அஞ்சா நெஞ்சுடனும் போதிக்கும்
மனிதர் என்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் கர்தினால் சிப்ரியானி.
74 வயதாகும்
Vargas Llosa, 30க்கும் மேற்பட்ட நாவல்களையும் நாடகங்களையும் கதைக்களமற்ற கட்டுரைகளையும்
எழுதியிருப்பவர். இவர் இவ்வாண்டுக்கான நொபெல் இலக்கிய விருது பெற்றுள்ளார்.