1780 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர். 1888ல்
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (இ. 1972) 1906ல் - இந்திய எழுத்தாளர் ஆர்.
கே. நாராயண், (இ. 2001) 1908ல் - தமிழிசைப் பாடகியும், நாடக, திரைப்படக் கலைஞருமான
கே. பி. சுந்தராம்பாள், ஆகியோர் பிறந்தனர். (இ. 1980) 1944 - இரண்டாம் உலகப் போர்:
800 ஜிப்சி சிறுவர்கள் ஆஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர். 1964 – டோக்கியோவில்
ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது. இது உலகமெங்கும் முதல் முறையாக செயற்கைக்
கொள் வழியாக ஒளி பரப்பப்பட்டது. 1974ல் தமிழறிஞர் மு. வரதராசனும், 2000த்தில் - உலகின்
முதல் பெண் பிரதமரும், இலங்கையின் பிரதம மந்திரியுமான சிறிமாவோ பண்டாரநாயக்காவும் இறந்தனர். 2009
– ஆர்மீனியாவும், துருக்கியும் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் உறவுகளைப் புதுப்பித்துக்
கொண்டன. அக்டோபர் 10 – அகில உலக மன நலம் பேணும் தினம்அக்டோபர் 10 – அகில உலக மரண தண்டனை
ஒழிப்பு தினம்