2010-10-08 16:27:38

கத்தோலிக்கப் பெண்களின் சாட்சிய வாழ்வுக்குத் திருத்தந்தை பாராட்டு


அக்.08,2010. திருச்சபையின் வாழ்வில் தங்களது விசுவாசத்தால் சாட்சியம் பகரும் கத்தோலிக்கப் பெண்களைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.

உலகக் கத்தோலிக்கப் பெண்கள் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டை எருசலேமில் சிறப்பித்து வரும் அதன் உறுப்பினர்களுக்குத் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே வழியாக அனுப்பிய செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஏறத்தாழ நூறு கத்தோலிக்கப் பெண்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பான இவ்வமைப்பில் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.