மறைந்தத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் குறித்த அருங்காட்சியகத்திற்கு போலந்து நாட்டில்
அடிக்கல் நாட்டப்பட்டது
அக்.07,2010 மறைந்தத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் குறித்த அருங்காட்சியகம் ஒன்று போலந்து
நாட்டில் நிறுவப்பட உள்ளது. 1920ம் ஆண்டு போலந்து நாட்டின் Wadowice என்ற இடத்தில்
பிறந்து 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வத்திக்கானில் இறையடி சேர்ந்த திருத்தந்தை இரண்டாம்
ஜான்பாலின் முழு வாழ்வையும் விளக்கும் ஒரு அருங்காட்சியகம் அவர் பிறந்த இல்லத்திலும்
அதைச் சுற்றிலும் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் அடிக்கல் இச்செவ்வாயன்று
Wadowiceயில் நாட்டப்பட்டது என்றும் இந்த அருங்காட்சியகம் 2012ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்
என்றும் செய்திகள் கூறுகின்றன.திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலுக்கு செயலராகப் பணியாற்றிய
Krakow உயர்மறைமாவட்டப் பேராயரான கர்தினால் Stanislaw Dziwiszம் Wadowiceயின் மேயர் Ewa
Filipiakம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.