திருப்பீடத்தின் சமுதாயத் தொடர்பு அவை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கர்தினால் தர்சிசியோ
பெர்த்தோனே ஆற்றிய மறையுரை
அக்.07,2010 செய்தித் துறையில் பணி செய்யும் கத்தோலிக்கருக்குக் கடவுளும், கிறிஸ்துவின்
நற்செய்தியும், உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கர்தினால் தர்சிசியோ பெர்த்தோனே கூறினார். தொடர்பு
சாதனம் மற்றும் செய்தித் துறையில் பணிபுரியும் 230 கத்தொலிக்கர்களுக்கென திருப்பீடத்தின்
சமுதாயத் தொடர்பு அவை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் இப்புதனன்று திருப்பலி ஆற்றி மறையுரை
வழங்கிய திருப்பீடத்தின் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்த்தோனே இவ்வாறு கூறினார். கத்தோலிக்கச்
செய்தித் துறை பணியாளர்கள் மக்களுக்கு உண்மையான தகவல்கள் வழங்கவும், சமுதாயத்தைக் சீராகக்
கட்டியெழுப்பவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய கர்தினால் பெர்த்தொனே, கிறிஸ்துவின்
நற்செய்திக்கும், கடவுளுக்கும் மக்கள் திறந்த மனதுடன் செவிமடுக்கச் செய்வது செய்தித்
துறையாளர்களின் கடமை என்றார். செய்தித் துறையில் பணி புரியும் கத்தோலிக்கர்கள் உலகில்
நிலவும் அரசியல், பொருளாதார, மற்றும் மத உணர்வுகளால் மக்களைப் பிரிப்பதற்கு பதில், உண்மையின்
அடிப்படையில் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற சிறப்பு அழைப்பினை விடுத்தார் கர்தினால்
பெர்த்தோனே.கர்தினால் தர்சிசியோ பெர்த்தோனே நிறைவேற்றியத் திருப்பலியில் திருப்பீடத்தின்
சமுதாயத் தொடர்பு அவையின் தலைவர் பேராயர் க்ளவுதியோ செல்லியும் கலந்து கொண்டார்.