2010-10-07 16:09:27

கத்தோலிக்க நிருபர்கள் தங்களது ஊடகப் பணியில் இறைமதிப்பீடுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் - திருத்தந்தை


அக்.07,2010. ஊடகத் துறைகளில் வேலை செய்யும் கத்தோலிக்கர் இவ்வுலக விடயங்களோடு தொடர்பு கொண்டு செயல்படுவதற்கானக் கட்டாய சூழல்கள் ஏற்படும்போதும்கூட அவர்கள் எப்பொழுதும் தங்களது விழுமியங்களில் கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தினார்.
உரோமையில் திருப்பீடச் சமூகத் தொடர்பு அவை நடத்திய சர்வதேச கத்தோலிக்கச் செய்தித்துறைக் கருத்தரங்கில் கலந்து கொண்ட 85 நாடுகளின் பிரதிநிதிகளை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
தற்போதைய உலகளாவிய ஊடகத்துறை மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது மற்றும் புதிய தொழிற்நுட்பங்களின் வளர்ச்சி, மரபுரீதியான ஊடகங்களின் பங்கைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களிடம் உண்மைக்கானத் தேடல் எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டும், அதேசமயம் தங்களது துறையில் அவர்கள் தேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.