2010-10-07 15:22:19

அக்டோபர் 08 நாளும் ஒரு நல்லெண்ணம்


அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆலயம் ஒன்றில் ஒருநாள் பிரார்த்தனை நடந்தது. அதில் கலந்து கொண்ட ஆபிரகாம் லிங்கன், “எனக்குத் தேவையான சக்தி கிடைத்துவிட்டது” எனக் குருவிடம் சொல்லி அவருக்கு வணக்கம் கூறி விடை பெற்றுச் சென்றார். அப்போது அங்கு இருந்த ஒருவர் ஆபிரகாம் லிங்கனைப் பார்த்து, “எதற்காகப் பிரார்த்தனை? கடவுளை எதிரியின் பக்கம் செல்லவிடாமல் நம் பக்கம் இழுப்பதற்குத்தானே பிரார்த்தனை” எனக் கேட்டார். அதற்கு ஆபிரகாம் லிங்கன், “கடவுள் என் பக்கம், எதிரி பக்கம் என்ற கருத்திற்கே இடமில்லை. நாம் கடவுளின் பக்கம் இருக்க வேண்டும், அதற்குத்தான் பிரார்த்தனை” என்றார்.

சந்திரன் குளிர்ச்சியாய்க் காய்ந்தாலும் உலகத்தார் சூரியனையே நாடுவார்கள்.







All the contents on this site are copyrighted ©.