2010-10-05 15:43:33

ஈக்வதோர் நாட்டில் பதட்டநிலைகள் முடிவுக்கு வந்து அமைதிக்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.


அக்.05,2010. ஈக்வதோர் நாட்டில் அரசுத்தலைவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் காவல்துறையின் ஒரு பிரிவால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்த அரசியல் பதட்டநிலைகள் முடிவுக்கு வரவேண்டும் எனவும், உண்மையான பேச்சுவார்த்தைகள் துவக்கப்படவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள். மோதல்களையல்ல, மாறாக அமைதியைக் கைக்கொண்டு மக்கள் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அந்நாட்டு ஆயர்கள்,வன்முறை வழிகளை கையிலெடுப்பதால் ஜனநாயக அமைப்புமுறைகளுக்கான மதிப்புக் கெடுவதுடன், அழிவும் நேருகிறது எனக் கூறியுள்ளனர். கடந்த சில காலமாக எழுப்பப்பட்டு வந்த மக்களின் ஒரு பிரிவினரின் குறைபாடுகள் வன்முறை மோதல்களாக வெடித்துள்ளன எனக்கூறும் ஆயர்கள், அரசின் மீது குறையுடையோர் குறிப்பாக ராணுவமும் காவல்துறையும் ஜனநாயக வழியில் சட்டத்தின் துணை கொண்டு அதற்குத் தீர்வு காண முயலவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.