இம்மாதம் 10 முதல் 24 வரை வத்திக்கானில் இடம்பெற உள்ளது மத்தியக்கிழக்கு நாடுகளுக்கான
சிறப்பு ஆயர் பேரவை.
அக்.05,2010. இம்மாதம் 10ந் தேதி முதல் 24ந்தேதி வரை வத்திக்கானில் இடம்பெறும் மத்தியக்கிழக்கு
நாடுகளுக்கான சிறப்பு ஆயர் பேரவைக்கான சிறப்பு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இச்சிறப்பு
ஆயர் பேரவைக்கெனத் தன் சார்பாக 17 பிரதிநிதிகளை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மத்தியக்கிழக்கு
நாடுகளில் வாழும் கத்தோலிக்கத்திருச்சபையின் ஒன்றிணைந்த வாழ்வும் சாட்சியமும் என்ற கருப்பொருளுடன்
இடம்பெறும் இச்சிறப்பு ஆயர் பேரவையில் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ, உக்ரைனின் கர்தினால்
லுபோமிர் ஹுசார், கர்தினால்கள் வால்ட்டர் காஸ்பர், ஜான் ஃபோலி ஆகியோரைப் பிரதிநிதிகளாக
நியமித்துள்ளார் திருத்தந்தை.
மேலும் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளவர்களுள்
இந்தியாவின் சீரோ மலங்கரா பேராயர் பசிலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கல், சீரோ மலபார் ரீதி
ஆயர் போஸ்கோ புதூர் ஆகியோரும் அடங்குவர்.