1582 - கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல்,
ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1889
- தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் சிகரம் முதன் முதலில் எட்டப்பட்டது. 1927 -
முதலாவது பேசும் திரைப்படம் ‘த ஜாஸ் சிங்கர்’ (The Jazz Singer) வெளியானது. 1979 –
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்குச் சென்றார். வெள்ளை மாளிகைக்குச்
சென்ற முதல் திருத்தந்தை இவரே. 1981 - எகிப்திய அதிபர் அன்வர் சதாத் கொலை செய்யப்பட்டார்.1987
- பிஜி குடியரசாகியது.