“உங்களது ஏழை மக்களுக்கு நீதியை மறுக்காதீர்கள்”- ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குத் திருச்சபைகள்
அழைப்பு
அக்.02,2010. “உங்களது ஏழை மக்களுக்கு நீதியை மறுக்காதீர்கள்” என்ற தலைப்பிலான அறிக்கை
ஒன்றை முக்கிய ஐரோப்பிய திருச்சபைகளும் அதன் நிறுவனங்களும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்தன.
ஐரோப்பிய பாராளுமன்ற கூட்டம் இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ளதை முன்னிட்டு
இவ்வறிக்கைச் சமர்ப்பிக்கப்ப்டடுள்ளது. இதில் 150 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
ஐரோப்பாவில்
ஏழ்மை குறைக்கப்படுவதற்கு உறுதி வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட 14 அரசியல் ரீதியான
பரிந்துரைகள் இவ்வறிக்கையில் இடம் பெற்றுள்ளன.