2010-10-02 14:38:40

விதவை அன்னமரியா முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவிருக்கிறார்


அக்.02,2010. பார்மா, புனித மரியின் அடிமைகள் என்ற அருட்சகோதரிகள் சபையைத் தொடங்கிய விதவையான இறையடியார் அன்னமரியா அதோர்னி இஞ்ஞாயிறன்று முத்திப்பேறு பெற்றவர் என அறிவிக்கப்படவிருக்கிறார்.

ஆறு பிள்ளைகளுக்குத் தாயான அன்னமரியா அவரது கணவர் இறந்த பின்னர் இச்சபையைத் தொடங்கினார்.

புனிதர் நிலைக்கானத் திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோவால் வட இத்தாலிய நகரான பார்மாவில் இஞ்ஞாயிறன்று முத்திப்பேறு பெற்றவர் என இவர் அறிவிக்கப்படவிருக்கிறார். இறையடியார் அன்னமரியா 1805 முதல் 1893 வரை வாழ்ந்தவர்.







All the contents on this site are copyrighted ©.