அக்.02,2010. சேரிகளிலிருந்து மக்கள் கூட்டாக வெளியேற்றப்படுவது நிறுத்தப்படுமாறு ஆம்னஸ்டி
இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு மனித உரிமைகள் கழகம் உலகை வலியுறுத்தியுள்ளது.
அக்டோபர்
4ம் தேதி உலக குடியிருப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இவ்வாறு கேட்டுள்ள அக்கழகம்,
சில வாரங்களுக்கு முன்னர் நியுயார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் பத்து கோடி சேரி
மக்களுக்கு உதவுவதற்கு அரசுகள் உறுதியளித்ததை நினைவுபடுத்தியது.
ஐரோப்பாவில்
ரோமா இனத்தவர், காமன்வெல்த் விளையாட்டை முன்னி்டடு புதுடெல்லி வாசிகள், நைஜீரியாவின்
Port Harcourtல் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உட்பட உலகில் பல இடங்களில் சேரிமக்கள்
தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளது அக்கழகம்.
இவ்வேளைகளில்
சர்வதேச சட்டங்கள் மீறப்படுவதையும் அக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.