மலேரியாவை 2015ம் ஆண்டுக்குள் ஒழிக்க முடியும் – ஐ.நா.நம்பிக்கை
செப்.30,2010. உலகில் ஆண்டுதோறும் சுமார் பத்து இலட்சம் பேரின் உயிர்களைக் காவு கொண்டு
வரும் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கு அரசுகள் சம்ர்ப்பித்துள்ள புதிய அர்ப்பணங்கள்
அந்நோயை 2015ம் ஆண்டுக்குள் ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது என ஐ.நா.மூத்த
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் ஐ.நா.வில் நடைபெற்ற மில்லென்னிய வளர்ச்சித்
திட்ட இலக்குகள் குறித்த கூட்டம் பற்றி நிருபர்களிடம் பேசிய ராபர்ட் ஓர், பிரிட்டன் மட்டுமே
தனது உதவியை மூன்று மடங்காக்க உறுதியளித்திருப்பதாகக் கூறினார்.