கத்தோலிக்க மறையைக் குறித்து விளக்கும் ஒளிப்பேழையை இலங்கை இயேசு சபை வெளியிட்டது
செப்.30,2010. இலங்கையில் இயேசு சபைக் குருக்கள் நடத்தும் சமுதாய அக்கறைக்கான இலங்கை
மையம் கத்தோலிக்க மறையைக் குறித்து விளக்கும் ஒளிப்பேழை ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. மேல்நிலைப்
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென்று உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒளிப்பேழை, படைப்பு, திருவருட்சாதனங்கள்,
செபிக்கும் முறைகள், பத்துக் கட்டளைகள் என்று நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்டன. கலைத்
துறையைச் சார்ந்த கலைஞர்களுக்குப் பதில் இந்நிகழ்ச்சிகளில் இளையோரே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளனர்
என்று இம்மையத்தின் இயக்குனர் இயேசு சபைக் குரு கேப்ரியேல் அல்பிரேட் கூறினார்.இவ்வொளிப்பேழைகளில்
கூறப்பட்டுள்ளவை வெறும் மதத் தொடர்பான பாடங்கள் மட்டுமல்ல, இவை கிறிஸ்து கூறும் வாழ்வுப்
பாடங்கள் என்று அருள்தந்தை லசாந்தா டி ஆப்ரூ கூறினார்.