கிழக்கு இந்தோனேசியக் கிறிஸ்தவர்களின் ஒன்றிணைந்த மத விடுதலைக்கான குரல்
செப்.28,2010. கிழக்கு இந்தோனேசியாவின் பாப்புவா மாகாணத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து
அரசை நோக்கி மத விடுதலைக்கான குரலை எழுப்பியுள்ளனர்.
இம்மாதம் 12ந்தேதி சில விஷமிகளால்
தாக்கப்பட்ட இரு கிறிஸ்தவக் குருக்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக ஜகார்த்தா
வந்த கிறிஸ்தவக் குழுக்கள் இந்தோனேசியாவில் மத சுதந்திரம் காக்கப்படவேண்டும் என குரலை
எழுப்பினர்.
மத சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்களும், தாக்குதல்களிலிருந்து
மக்களைக் காப்பாற்ற அரசு தவறுவதும் தொடருமானால், கிறிஸ்தவர்கள் இந்தோனேசியாவிலிருந்து
விலகிச் செல்லவேண்டியிருக்கும் என்று பாப்புவா மாகாணத்தின் பிரிந்த கிறிஸ்தவ சபையின்
ஒருமைப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.
பாப்புவா மாகாணத்தில் பிரிந்த கிறிஸ்தவ
சபையினரே பெரும்பான்மையினராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.