அமலமரி தியாகிகள் சபையின் புதிய அதிபர் அருள்தந்தை லூயி லோகன்
செப்.28,2010. அமல மரி தியாகிகள் சபையின் புதிய அதிபராக அமெரிக்க ஐக்கிய நாட்டு மாகாணத்
தலைவர் குரு லூயி லோகன் (Louis Lougen) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உரோம் நகரில்
கூடிய 35வது பேரவையில் அச்சபையின் 13வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 58 வயதான
குரு Lougen, 66 நாடுகளில் பணிபுரியும் 4000க்கும் மேற்பட்ட அமலமரி தியாகிகளை அடுத்த
ஆறு ஆண்டுகளுக்கு வழிநடத்திச் செல்வார்.
அமலமரி தியாகிகள் சபையின் புதிய அதிபரான
அமெரிக்க ஐக்கிய நாட்டு குரு Lougen, பிரேசில் நாட்டில் அதிக காலம் பணியாற்றியுள்ளதுடன்,
அமெரிக்க ஐக்கிய நட்டில் அமல மரி தியாகிகள் சபையின் நவதுறவியர்க்கான அதிபராகவும், அமெரிக்க
மாகாணத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.