நீங்கள் வாழ்வதற்கு ஒரேயொரு நிமிடம்தான் இருக்கின்றது என்ற நிலை வந்தால் என்ன செய்வீர்கள்?
இந்தக்
கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால் நான் என்ன செய்வேன் என்று வலைத்தளம் ஒன்றில் ஒருவர் பகிர்ந்து
கொள்கிறார்
நான் எனது இதயத்தை முழுவதுமாக திறந்து வைத்து இறைவனைத் தழுவிக் கொள்வேன்.
ஏனெனில் என்னை இயக்குபவர் இறைவனே, என்னை இயக்குவது அந்த இறைசக்தியே.
என்னிடமிருக்கின்ற
எல்லா அன்பையும் ஒவ்வொருவருடனும் பகிர்ந்து கொள்வேன். ஒவ்வொருவருக்கும் எனது இதயம்நிறை
பாராட்டுக்களையும் ஆசீர்வாதங்களையும் அனுப்புவேன். ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம்
இருப்பதைக் கொண்டு என்னை எல்லாவிதத்திலும் ஆசீர்வதித்திருக்கிறார்கள். இப்பூமிப்பந்துக்கும்
கோளங்களுக்கும் பெருங்கடல்களுக்கும் செடிகளுக்கும் மலர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்
நன்றி சொல்வேன். ஏனெனில் இவையனைத்தும் நான் தனியாக இல்லை என்ற உணர்வை என்னில் ஏற்படுத்தி
என் வாழ்வை வளப்படுத்தியிருக்கின்றன.
எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இறைவனைப்
பற்றிய எண்ணம் கொண்டிருத்தல் மாறாத மகிழ்ச்சியைத் தருகிறது