1580 - சர் பிரான்சிஸ் டிரேக் (Sir Francis Drake) உலகைச் சுற்றி மேற்கொண்ட கடல் பயணத்தை
வெற்றிகரமாக முடித்தார். 1950 - இந்தோனேசியா ஐ.நா.வில் இணைந்தது. 1962 - யேமன்
அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது. 1984 – பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் கையளிக்க
ஒப்புக் கொண்டது. இவ்வொப்பந்தம் 1997ம் ஆண்டு நடை முறைக்கு வந்தது. 1987 - தமிழீழ
விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன்ட் கர்னல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம்
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார். 2000
– உலகமயமாக்கலை எதிர்த்து, Pragueல் 20,000 பேருக்கு மேற்பட்டோர் நடத்திய போராட்டம் வன்முறையில்
முடிந்தது.2002 - அளவுக்கதிகமாய் மக்களை ஏற்றி வந்த செனெகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவுக்கருகே
கடலில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.