உலகில் எதிர்பாராதவிதமாக இடம் பெறும் விலைவாசி உயர்வுகள் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக
இருக்கின்றன - ஐ.நா.வல்லுனர்கள் எச்சரிக்கை
செப்.25,2010. உலகில் உணவு நெருக்கடி அச்சுறுத்தும் நிலையில் இல்லாவிடினும் எதிர்பாராதவிதமான
விலைவாசி உயர்வுகள் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஐ.நா.கூட்டத்தில்
வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் திடீரென உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பதைத்
தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, 75 நாடுகளுக்கு மேற்பட்ட உணவுப் பொருள்
வல்லுனர்கள் கேட்டுக் கொண்டனர்.சர்வதேச அளவில் கோதுமை விலை கடந்த ஜூலையிலிருந்து 60 முதல்
80 விழுக்காடு வரையும் சோளம் விலை சுமார் 40 விழுக்காடும் அதிரித்துள்ளன என்று FAO என்ற
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் உரோமையில் நடத்திய கூட்டத்தில் கூறியுள்ளது.