புனித பாத்ரே பியோவின் திருப்பண்டங்கள் சிங்கப்பூரில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன
செப்.23, 2010. இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட புனித பாத்ரே பியோவின் திருநாளையொட்டி, கடந்த
மூன்று நாட்களாக சிங்கப்பூரில் புனிதரின் திருப்பண்டங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இச்செவ்வாயன்று
சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்ட புனிதரின் திருப்பண்டங்களில் அவரது உடலில் தோன்றியத்
திருக்காயங்களைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த இரத்தம் தோய்ந்த துணியும் அடங்கும். இத்திருப்பண்டங்கள்
சிங்கப்பூரின் தூய ஆவியாரின் கத்தோலிக்கக் கோவிலில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததெனவும்,
இத்திருப்பண்டங்களை வணங்க நூற்றுக்கணக்கில் மக்கள் நாள் முழுவதும் வந்தனர் என்றும் செய்திக்
குறிப்பொன்று கூறுகிறது.புனித பாத்ரே பியோ குறித்த பக்தி முயற்சிகள் சிங்கப்பூரில் ஒவ்வொரு
மாதமும் மூன்று கோவில்களில் மேற்கொள்ளப்படுகின்றன என்று இச்செய்திக் குறிப்பு மேலும்
கூறுகிறது.