2010-09-22 16:03:18

அக்டோபர் மாதம் திருத்தந்தை இத்தாலியில் உள்ள பலேர்மோவுக்கு மேய்ப்புப் பணி திருப்பயணம் மேற்கொள்கிறார்


செப்.22, 2010. அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் ஞாயிறன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இத்தாலியில் உள்ள பலேர்மோ என்ற ஊருக்கு மேய்ப்புப் பணி திருப்பயணம் மேற்கொள்கிறார் என்றும் அப்பகுதியின் குடும்பங்கள் மற்றும் இளையோருக்கான கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றும் வத்திக்கான் செய்தி அலுவலகம் கூறியுள்ளது.
அக்டோபர் மூன்றாம் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பலியையும், பின்னர் மூவேளை செப உரையையும் ஆற்றுவார் திருத்தந்தை.அன்று மாலை ஐந்து மணியளவில் பலேர்மோவிலுள்ள பேராலயத்தில் குருக்கள், துறவறத்தார், மற்றும் குரு மாணவர்களைச் சந்தித்தபின், நகரின் திறந்த வெளி அரங்கத்தில் இளையோரைச் சந்தித்துப் பேசுவார். மாலை மீண்டும் உரோம் நகரம் திரும்புவார்.







All the contents on this site are copyrighted ©.