2010-09-18 15:36:23

செப்டம்பர் 19, நாளுமொரு நல்லெண்ணம்


சின்ன வயதில் சாலை ஓரங்களில் காட்டப்பட்ட கண்கட்டி வித்தைகளைப் பார்த்திருக்கிறோம்.
இன்றைய உலகில் ஏமாற்று வித்தைகள் பலரது வாழ்வில் வேதனைகளை உருவாக்குவதைப் பார்க்கிறோம்.
விளையாட்டு கண்கட்டி வித்தைகளைக் கண்டு கைதட்டி ரசித்தோம்.
வினையான கண் கட்டி வித்தைகளைக் கண்டு கைகட்டி நிற்கிறோம்.
கைகட்டி நிற்போர் அதிகமாகி வருவதால், கண்கட்டும் வித்தைக்காரர்கள் அதிகமாகிப் போனார்கள்.
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்விப் படுகிறோம்.
ஆனால், எமாறுகிறவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள்.
அவர்களை ஏமாற்றுகிறவர்கள் பெரும்பாலும் செல்வம் படைத்தவர்கள்.
கண்கட்டும் வித்தைகளை இனம் காண, நாம் அணிந்திருக்கும் கண்கட்டை அவிழ்ப்போம்.கைகட்டி இவைகளைப் பார்க்காமல், கை கொடுப்போம் ஏழைகளை உயர்த்த.







All the contents on this site are copyrighted ©.