போஸ்னியா எர்ஸகொவீனா நாட்டின் ராணுவத்தில் ஆன்மீகச் சேவைகள் ஆற்றுவது குறித்த ஒப்பந்தம்
வத்திக்கானில் பரிமாறிக்கொள்ளப்பட்டது
செப்டம்பர் 14, 2010. போஸ்னியா எர்ஸகொவீனா நாட்டின் இராணுவத்தில் பணியாற்றும் கத்தோலிக்க
விசுவாசிகளுக்கு ஆன்மீகச் சேவைகள் ஆற்றுவது குறித்து ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம்
இச்செவ்வாயன்று வத்திக்கான் மற்றும் அந்நாட்டுத் தலைவர்களிடையே பரிமாறிக்கொள்ளப்பட்டது.
திருப்பீடத்திற்கும்
போஸ்னியா எர்ஸகொவீனா நாட்டிற்கும் இடையேயான இவ்வொப்பந்தம், திருப்பீடத்தின் சார்பில்
திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே மற்றும் நாடுகளுக்கிடையேயான திருப்பீடச்செயலகத்தின்
செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோருக்கும் போஸ்னியா எர்ஸகொவீனாவின் வெளியுறவு
அமைச்சர் Sven Alkalajக்கும் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இராணுவத்தில் உள்ள
கத்தோலிக்க விசுவாசிகளுக்கு ஆன்மீகப் பணியாற்றுவது குறித்து இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான
ஒப்பந்தம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 8ந்தேதி சரயேவோவில் கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.