70 வயதைத் தாண்டிய இலங்கை கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது
செப்.11,2010. இலங்கையில் எழுபது வயதைக் கடந்த கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைச் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும்
70 வயதைத் தாண்டிய கைதிகளுக்கு அரசுத்தலைவர் பொதுமன்னிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளார்
என்றும் கூறப்பட்டுள்ளது.
இஞ்ஞாயிறன்று கைதிகள் நலன்புரி தினம் கடைபிடிக்கப்பட
உள்ளதாகவும் இதனை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தவிர்த்த ஏனைய 70 வயதைக் கடந்த கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
வழங்கப்பட உள்ளது.