2010-09-10 15:54:16

ஹங்கேரி அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு


செப்.10,2010. ஹங்கேரி அரசுத்தலைவர் Pál Schmitt இவ்வெள்ளியன்று காஸ்தெல் கந்தோல்போவில் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்ததி ஆகியோரையும் சந்தித்தார் ஹங்கேரி அரசுத்தலைவர்.

இச்சந்திப்புக்களில் ஹங்கேரி நாட்டுக்கும் தலத்திருச்சபைக்கும் இடையேயான உறவு, அந்நாட்டின் பொது நலனுக்காகத் திருச்சபை ஆற்றி வரும் சேவைகள், தற்போதைய சர்வதேச அளவிலான பிரச்சனைகள் போன்ற தலைப்புகள் இடம் பெற்றன







All the contents on this site are copyrighted ©.