செப்.10,2010. இலங்கையின் வடக்குப் பகுதியில் கல்பிட்டியா கடற்கரை கிராமத்தில் தமிழ்
அகதிகளுக்கு 12 புதிய வீடுகள் கட்டுவதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளது சிலாவ் மறைமாவட்ட
காரித்தாஸ்.
1990களில் உள்நாட்டுச் சண்டையின் போது கொஞ்சம் துணிகளோடு மட்டும்
புலம் பெயர்ந்து கல்பிட்டியாவில் அடைக்கலம் தேடிய சுமார் 42 தமிழ்க் குடும்பங்களுக்கு
வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார் சிலாவ் காரித்தாஸ் இயக்குனர் அருள்திரு
ஆபிரகாம் பர்னபாஸ்.
இவ்வீடுகளுக்கென சுமார் நான்கு இலட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ள
காரித்தாஸ் நிறுவனம், உள்ளூர் மக்களும் இவ்வீடுகள் கட்டுவதற்கு உதவி செய்வதாகக் கூறியதாகத்
தெரிவித்தது