அமைதி மற்றும் நீதிக்காக உழைப்பதற்கு யூதர்கள் மற்றும் கத்தோலிக்கர் மத்தியில் முயற்சிகள்
அதிகரிக்கப்பட வேண்டும் - திருத்தந்தை
செப்.10,2010. பிரச்சனைகள் மிகுந்த இவ்வுலகில் அமைதி மற்றும் நீதிக்காக உழைப்பதற்கு யூதர்கள்
மற்றும் கத்தோலிக்கர் மத்தியில் முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை கேட்டுக்
கொண்டார்.
Rosh Hashana, Yom Kippur, Sukkot ஆகிய யூதர்களின் விடுமுறை நாட்களை
முன்னிட்டு உரோம் யூதமதத் தலைமைக் குரு ராபி Riccardo Di Segniக்கு வாழ்த்துத் தந்தி
அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
உரோமையிலும் உலகெங்கும் இருக்கின்ற
யூதர்களும் கத்தோலிக்கரும் ஒருவர் மற்றவருடன் நட்பில் வளர இறைவன் தொடர்ந்து உதவி செய்வாராக
என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை