பாப்புவா நியு கினியில் எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் பணி செய்யும் கத்தோலிக்கர் புகழப்படாத
ஹீரோக்கள் – அமைச்சர்
செப்.07,2010. பாப்புவா நியு கினி நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் நலவாழ்வுப் பணி
செய்யும் கத்தோலிக்க அருட்சகோதரிகளும் குருக்களும் கத்தோலிக்க மறைப்பணியாளர்களும் புகழப்படாத
ஹீரோக்களாக இருக்கிறார்கள் என்று அந்நாட்டு சமூக வளர்ச்சித் துறை அமைச்சர் கரோல் கிடு
ஐ.நா. கூட்டமொன்றில் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்ற ஐ.நா.கருத்தரங்கில்
பேசிய அவ்வமைச்சர் கத்தோலிக்கத் திருச்சபையின் நலப்பணிகளைப் பாராட்டினார்.
பாப்புவா
நியு கினி நாட்டில் உள்ள பெருமளவான மருத்துமனைகள் கத்தோலிக்கத் திருச்சபையால் நடத்தப்படுகின்றன
மற்றும் அங்குப் பணியாற்றும் கத்தோலிக்க அருட்சகோதரிகள் மற்றும் குருக்களின் பெருமுயற்சியால்
HIVநோய்க் கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது,
ஏன் அது குறைந்து்ம் வருகின்றது என்றும் அக்கூட்டத்தில் அறிவிக்கப்பபட்டது.