செப்.06,2010. திருநற்கருணை வெறும் ரொட்டித் துண்டு அல்ல, மாறாக அது இறைவன் என்பதால்
எல்லாக் குருக்களும் திருநற்கருணை முன் மண்டியிட்டு மரியாதை செலுத்துமாறு அழைப்பு விடுப்பதாகக்
கூறினார் கொழும்புப் பேராயர் மால்கம் இரஞ்சித். இதே பக்தியில் பங்கு மக்களையும் குருக்கள்
வழிநடத்துமாறும் பேராயர் கேட்டுள்ளார். தெவாட்டா இலங்கை மாதா திருத்தலத்தில் சிறப்பு
திருநற்கருணை ஆண்டைத் தொடங்கி வைத்து மறையுரையாற்றிய பேராயர் இரஞ்சித் இவ்வாறு கேட்டுள்ளார்.இவ்வாண்டு
தொடக்க நிகழ்ச்சியில் திருப்பீட திருவழிபாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் Antonio Cañizares
Llovera ம் கலந்து கொண்டார்.