2010-09-06 15:43:04

இளையோர் இயேசு கிறிஸ்துவில் வேருன்றி அவரில் கட்டி எழுப்பப்பட திருத்தந்தை மீண்டும் அழைப்பு


செப்.06,2010. திருத்தந்தை 13ம் சிங்கராயரிடம் விளங்கிய பண்புகளை இளையோரும் தங்கள் வாழ்க்கையின் அடித்தளமாகக் கொண்டிருக்குமாறு முவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இயேசு கிறிஸ்துவில் வேருன்றி அவரில் கட்டி எழுப்பப்பட வேண்டும், விசுவாசத்தில் உறுதியாய் இருக்க வேண்டும் என்று 26வது உலக இளையோர் தினச் செய்தியில் தான் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தப் பரிந்துரை இக்காலத்திய பொதுவான போக்குக்கு எதிராக இருக்கின்றது என்றார்.எனினும் இக்காலத்தில் வேருன்றி கட்டி எழுப்பப்படுங்கள் என்று இளையோருக்கு யார் சொல்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு தூண்டி உதவுவது அடிப்படையான விழுமியங்களும் கோட்பாடுகளுமே என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.