2010-09-06 15:43:19

ஆசிய கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாட்டிற்குத் திருத்தந்தை வழங்கிய ஆதரவுக்கு நன்றி


செப்.06,2010. ஆசிய கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாட்டிற்குத் திருத்தந்தை வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவி்ததும் ஆசியக் கத்தோலிருக்கருக்குமென செய்திகளை வெளியிட்டுள்ளது அம்மாநாடு.
தென் கொரியாவின் சோலில் இஞ்ஞாயிறன்று நிறைவடைந்த இம்மாநாட்டின் இறுதியில் செய்திகளை வெளியிட்ட மாநாட்டுப் பிரதிநிதிகள், ஆசியக் கத்தோலிக்கர் சிறுபான்மையினராய் இருந்தாலும் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முக்கியமான பணியை உணர்ந்தே இருப்பதாகக் கூறியுள்ளனர்.
தற்சமயம் திருச்சபை எல்லா இடங்களிலும் கடினமான சூழல்களைத் எதிர்கொள்வதாகத் தெரிகின்றது, ஆசியக் கத்தோலிக்கரும் இதேமாதிரியானச் சூழலிலே வாழ்வதாகத் திருத்தந்தைக்குத் தெரியப்படுத்தியுள்ள அப்பிரதிநிதிகள் ஆசிய மக்களுக்கு இயேசு கிறிஸ்துவும் அவரது நற்செய்தியும் தேவை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
பலவிதமான அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் விசுவாசத்திற்குச் சான்று பகரும் எல்லாப் பொதுநிலையினருக்கும் இம்மாநாட்டினர் நன்றி தெரிவித்துள்ளனர்.ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கிய ஆசிய கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாடு இஞ்ஞாயிறன்று நிறைவடைந்தது.







All the contents on this site are copyrighted ©.