2010-09-04 14:37:44

உலகில் வயது வந்தவர்களில் ஆறு பேருக்கு ஒருவர் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள்


செப்.04,2010. உலகில் கல்வியறிவற்றவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இன்னும் வயது வந்தவர்களில் ஆறு பேருக்கு ஒருவர் வீதம் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாய் இருக்கின்றனர் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

செப்டம்பர் 8, வருகிற புதனன்று உலக கல்வியறிவு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், பெண்சக்தியைப் பலப்படுத்தவும் சிறுவர் சிறுமியருக்கு ஆரம்பக் கல்வி வழங்கவும் அதிக நிதியுதவியும் தரமான கல்வி குறித்த ஆலோசனையும் தேவைப்படுகின்றன என்றார்.

உலகில் எழுத வாசிக்கத் தெரியாத வயது வந்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள். மேலும், ஏழு கோடியே இருபது இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.