2010-09-03 16:19:46

படைப்பைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லாரின் தவிர்க்க இயலாத கடமை - திருத்தந்தை


செப்.03,2010. படைப்பின் பாதுகாவலர்களாக, அதனைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லாரின் தவிர்க்க இயலாத கடமையாக இருக்கின்றது என்று திருத்தந்தை ஐரோப்பிய பசுமைத் திருப்பயணிகளுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இப்புதன் முதல் வருகிற ஞாயிறு வரை ஹங்கேரி நாட்டிலிருந்து சுலோவாக்கியா வழியாக ஆஸ்ட்ரியாவின் மரியாசெல் அன்னைமரித் திருத்தலத்திற்குப் பசுமைத் திருப்பயணம் மேற்கொண்டு வரும் ஐரோப்பியத் திருப்பயணிகளுக்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த வாழ்த்துச் செய்தியை திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.