கர்தினால் டர்க்சன் - அமைதியைக் கட்டி எழுப்ப விரும்பினால் படைப்பைப் பாதுகாக்க வேண்டும்
செப்.03,2010. மேலும், சுலோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவாவில் இவ்வெள்ளியன்று இத்திருப்பயணிகளுக்கு
உரையாற்றிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், அமைதியைக்
கட்டி எழுப்ப விரும்பினால் படைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
படைப்பு வேலையில்
பங்குதாரர்களாக இருக்கும் நாம் படைப்பைப் பாதுகாக்க வேண்டிய கடவுளின் திட்டத்திலும் பங்கெடுக்க
வேண்டிய கடமையைக் கொண்டுள்ளோம் என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன்.
படைப்பைப்
பாதுகாத்து அதன்மீது அக்கறை எடுக்க வேண்டியது நம் எல்லாரின் பொறுப்பாக இருக்கின்றது என்றும்
இந்தப் பொறுப்புணர்வுக்கு எல்லைகளே இல்லை என்றும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழலைப்
பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்தப் பசுமைத் திருப்பயணம், CCEE என்ற
ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.