செப்டம்பர்03,2010. வானொலி நண்பர்களே, செப்டம்பர் 08 அன்னைமரியாவின் பிறப்பு விழா. வேளைநகர்
ஆரோக்ய அன்னையின் திருவிழா. இவ்விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றப்பட்டு
நவநாள் பக்தி முயற்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கேட்டவர்க்கு கேட்ட வரம்
கொடுக்கும் அந்த இறைவனின் தாயின் மகிமை குறித்து முதலில் பேசுகிறார் அருள்திரு முனைவர்
பன்னீர் செல்வம். இவர் வேளாங்கண்ணி மரியியல் நிறுவனத்தின் இயக்குனர்.
இவ்வாண்டு விழாத் தயாரிப்புகள்,
இவ்விழா நடைபெற்று வரும் விதம் போன்றவை குறித்து விளக்குகிறார் வேளாங்கண்ணித் திருத்தல
உதவிப் பங்குத்தந்தை அருள்திரு ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
இந்த ஆரோக்ய அன்னையின்
அருள்வரங்களைப் பெற்றிருப்பவர் பலகோடி பக்தர்களில் இருவர் நம்மோடு தொலைபேசியில் பேசுகின்றனர்.