2010-09-02 15:45:13

கிறிஸ்துவின் நண்பர்களாக வாழ்வதில் இளையோர் தங்கள் மகிழ்வைக் காணவேண்டும் - திருத்தந்தை


செப்.02,2010. கோடை விடுமுறைகளை முடித்துவிட்டு, மீண்டும் தங்கள் கல்வியைத் தொடர அல்லது பணிகளைத் தொடர இருக்கும் அனைத்து மக்களையும், சிறப்பாக இளையோரை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வாழ்த்தினார்.

வருகிற ஞாயிறன்று வெனேசுவேலாவில் ஆரம்பமாகும் மூன்றாவது லத்தீன் அமெரிக்க இளையோர் மாநாட்டிற்கான சிறப்பு வாழ்த்துக்களை இஸ்பானிய மொழியில் வழங்கிய திருத்தந்தை, இளையோர் கிறிஸ்துவைத் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் சந்திக்க இந்த மாநாடு பெரிதும் உதவும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

இந்த மாநாட்டின்போது, அன்னை மரியா இளையோருக்குத் துணை இருக்கவும், கிறிஸ்துவின் நண்பர்களாக வாழ்வதில் இளையோர் தங்கள் மகிழ்வைக் காணவும் தன் வாழ்த்துக்களைச் சிறப்பான வகையில் கூறினார் திருத்தந்தை







All the contents on this site are copyrighted ©.