இவ்வாண்டு இறுதிக்குள் திருத்தந்தையின் பேட்டிகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படும்
செப்.01, 2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஜெர்மன் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு அண்மையில்
அளித்த பேட்டியைப் புத்தகமாக வெளியிட வத்திக்கான் அதிகாரம் அளித்துள்ளது.
திருத்தந்தை
தன் கோடை விடுமுறை இல்லத்தில் ஜெர்மன் பத்திரிக்கையாளர் Peter Seewaldஉடன் மேற்கொண்ட
பேட்டிகளின் தொகுப்பு இவ்வாண்டு இறுதிக்குள் ஒரு புத்த்தகமாக வெளியிடப்படும் என்று வத்திக்கானின்
அதிகாரப் பூர்வப் பேச்சாளர் இயேசு சபைக் குரு ஃபெடெரிகோ லொம்பார்தி இச்செவ்வாயன்று அறிவித்தார்.
ஆப்ரிக்காவில்
AIDS நோய், பாலியல் வன்முறைகள் குறித்து திருச்சபை சந்தித்த சவால்கள் உட்பட பல கேள்விகளுக்கு
இந்தப் பேட்டியில் திருத்தந்தை பதிலளித்துள்ளார் எனத் தெரிகிறது.
இவ்வாண்டு இறுதிக்குள்
திருத்தந்தையின் பேட்டிகள் அடங்கிய புத்தகம் இத்தாலிய, ஜெர்மானிய மொழிகளில் வெளி வரும்
என்று அருள்தந்தை லோம்பார்தி கூறினார்.
திருத்தந்தை 16 ம் பெனடிக்ட் கர்தினாலாய்
இருந்த போது, ஜெர்மன் பத்திரிக்கையாளர் Peter Seewaldஉடன் மேற்கொண்ட பேட்டிகள் 1996 மற்றும்
2002ம் ஆண்டுகளில் இரு புத்தகங்களாய் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.