2010-08-30 14:42:32

அகதிகள் மற்றும் குடியேற்றதாரர்களை திறந்த மனதுடன் ஏற்க வேண்டும் - ஆஸ்திரேலிய ஆயர் பீட்டர் இன்காம்


ஆகஸ்ட் 30, 2010. ஒவ்வொரு நாட்டிலும் தினமும் புதிதாக வந்து சேரும் அகதிகள் மற்றும் குடியேற்றதாரர்களை திறந்த மனதுடன் ஏற்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் வொல்லோங்கோங் (Wollongong) மறைமாவட்ட ஆயர் பீட்டர் இன்காம் (Ingham) கூறினார்.

இந்த ஞாயிறை அகதிகள் மற்றும் குடியேற்றதாரருக்கான ஞாயிறென்று அம்மறை மாவட்டம் கொண்டாடியபோது, ஆயர் பீட்டர் இன்காம் (Ingham) இவ்வாறு கூறினார்.

தீவிரவாதம், இனவெறி, பொருளாதாரப் பின்னடைவு என்ற பல்வேறு காரணங்களைக் காட்டி நாட்டிற்குள் வருவோரை ஏற்க மறுப்பது கிறிஸ்தவப் பாரம்பரியத்திற்கும், ஆஸ்திரேலிய அடிப்படை குணத்திற்கும் எதிரானவை என்று ஆயர் பீட்டர் இன்காம் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.