2010-08-27 15:12:52

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுமாறு தென் கொரியக் கர்தினால் வேண்டுகோள்


ஆக.27,2010. பாகிஸ்தான் மற்றும் வட கொரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருகிற செப்டம்பர் 5ம் தேதி ஞாயிறன்று நிதி திரட்டுமாறு தென் கொரியக் கர்தினால் Nicholas Cheong Jin-suk கேட்டுள்ளார்.

செயோல் உயர்மறைமாவட்டப் பங்குத்தந்தையரிடம் இரண்டாவது தடவையாக இவ்வேண்டுகோளை முன்வைத்த செயோல் பேராயரான கர்தினால் நிக்கோலாஸ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதன் மூலம் கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள சகோதர அன்பை நிரூபிக்க முடியும் என்றார்.

செயோல் உயர்மறைமாவட்டம் பாகிஸ்தான் காரித்தாசுக்கு முப்பதாயிரம் டாலரை ஏற்கனவே அனுப்பியுள்ளது.

வடகொரியாவில் இச்செவ்வாயன்று பெய்த கனமழையால் சுமார் ஐயாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும், வீடுகளும் விளைநிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.







All the contents on this site are copyrighted ©.