முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டு
ஆகஸ்ட் 26,2010. இன்று முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டு. உலகெங்கும்
குறிப்பாக கொல்கத்தாவில் இவ்விழாக் கொண்டாட்டம் வெகு ஆடம்பரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே இவ்விழா பற்றி அருள்தந்தை பீட்டர் சுவாமிக்கண்ணு சே.ச, அவர்களிடம் தொலைபேசி வழியாகக்
கேட்டோம். கொல்கத்தா இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்த இவர் கொல்கத்தாவில் 28 ஆண்டுகளாகப்
பணியாற்றி வருகிறார். இவர் கொல்கத்தா இயேசு சபை இல்லத்தின் தலைவராவார்.
முத்திப்பேறு
பெற்ற அன்னை தெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டை முன்னிட்டு அருள்தந்தை மரிய அகுஸ்தீன் சே.ச.,
அவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். இவர் அன்னை தெரேசா வாழ்ந்த போது அவரில்லத்தில்
திருப்பலி நிகழ்த்தியிருக்கிறார். அன்னையோடு சுமார் முப்பது நிமிடங்கள் உரையாடியும் இருக்கிறார்.
சென்னை இலொயோலா வணிக நிர்வாக நிறுவனத்தின் பொருளியியல் துறையில் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.